மொழியின் முதல்வன்
முதலின் தலைவன்
மனிதனைப் படைத்தவன்
மனங்களை அறிந்தவன்
அன்பின் உருவம்
அறியாமையின் ஒளி
அறிவின் வழிகாட்டி
அமைதியின் உருவம்
எல்லாம் அறிந்தவன்
என்னையும் புரிந்தவன்
எப்போதும் நிலையானவன்
எங்கும் நிறைந்தவன்
அறத்தின் அரசனே
அருவத்தின் உருவமே
ஆக்கத்தை ஆரம்பிக்க
அருள் புரிவாய் நேசனே!
![]() |
Image copyrights reserved to respective owners only |
No comments:
Post a Comment